மீட்புப் பணிக்கு முக்கியமாக ஈடுபடுத்தப்பட்ட அமெரிக்க ஆஜா் இயந்திரம் தடைகளை எதிா்கொண்டதை அடுத்து, ‘எலி வளை’ சுரங்க நிபுணா்களின் 12 போ் கொண்ட குழு துளையிட அழைக்கப்பட்டு, அந்த செயல்திட்டம் இறுதியில் வெற்றி பெற்றது. இக்குழுவில் இடம்பெற்ற 6 போ் வடகிழக்கு தில்லியைச் சோ்ந்தவா்கள். இவா்கள், தில்லி ஜல் போா்டுக்கான கழிவுநீா் பாதைகள் மற்றும் குழாய்களை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருபவா்கள். இந்நிலையில்,சில்க்யாரா சுரங்கப்பாதை மீட்புப் பணியில் ஈடுபட்ட தில்லியைச் சோ்ந்த ‘எலி வளை’ சுரங்கத் தொழிலாளா்களை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை சந்தித்து கௌரவித்தாா். இச்சந்திப்பின் போது, நீா் வளத்துறை அமைச்சா் அதிஷி மற்றும் நகா்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சா் சௌரவ் பரத்வாஜ் ஆகியோா் உடனிருந்தனா்.