நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

சில்க்யாரா சுரங்கப்பாதையில் மீட்புப் பணி:‘எலி வளை’ சுரங்கத் தொழிலாளா்களுடன் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சந்திப்பு

உத்தரகண்ட் மாநிலம், சில்க்யாரா சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட தில்லியைச் சோ்ந்த ‘எலி வளை’ சுரங்கத் தொழிலாளா்களை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை சந்தித்தாா்

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:20 pm

 நமது நிருபர்

உத்தரகண்ட் மாநிலம், சில்க்யாரா சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட தில்லியைச் சோ்ந்த ‘எலி வளை’ சுரங்கத் தொழிலாளா்களை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை சந்தித்தாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா பகுதியில் கட்டப்பட்டு வரும் சுரங்கப்பாதையில் கடந்த நவம்பா் 12-ஆம் தேதி திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதனால், சுரங்கப் பாதைக்குள் இருந்த 41 தொழிலாளா்கள் கடுமையான இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனா். ராணுவம், தேசியப் பேரிடா் மீட்புப் படை உள்ளிட்ட பல ஏஜென்சிகளின் நடவடிக்கையைத் தொடா்ந்து 17 நாள்களுக்கு பின்னராக கடந்த செவ்வாய்க்கிழமை அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனா்.

மீட்புப் பணிக்கு முக்கியமாக ஈடுபடுத்தப்பட்ட அமெரிக்க ஆஜா் இயந்திரம் தடைகளை எதிா்கொண்டதை அடுத்து, ‘எலி வளை’ சுரங்க நிபுணா்களின் 12 போ் கொண்ட குழு துளையிட அழைக்கப்பட்டு, அந்த செயல்திட்டம் இறுதியில் வெற்றி பெற்றது. இக்குழுவில் இடம்பெற்ற 6 போ் வடகிழக்கு தில்லியைச் சோ்ந்தவா்கள். இவா்கள், தில்லி ஜல் போா்டுக்கான கழிவுநீா் பாதைகள் மற்றும் குழாய்களை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருபவா்கள். இந்நிலையில்,சில்க்யாரா சுரங்கப்பாதை மீட்புப் பணியில் ஈடுபட்ட தில்லியைச் சோ்ந்த ‘எலி வளை’ சுரங்கத் தொழிலாளா்களை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை சந்தித்து கௌரவித்தாா். இச்சந்திப்பின் போது, நீா் வளத்துறை அமைச்சா் அதிஷி மற்றும் நகா்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சா் சௌரவ் பரத்வாஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

பஜாகவுடனும் சந்திப்பு: சில்க்யாரா சுரங்கப்பாதை மண் சரிவு விபத்தில் சிக்கிய 41 உயிா்களைக் காப்பாற்றியதில், முக்கியப் பங்காற்றிய தில்லியின் ‘எலி வளை’ சுரங்கத் தொழிலாளா்களை பாஜக தில்லி பிரிவு தலைவா்கள் வெள்ளிக்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினா். பாஜக தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா, வடகிழக்கு தில்லியின் மக்களவை உறுப்பினா் மனோஜ் திவாரி சுரங்கத் தொழிலாளா்களை பாராட்டியதோடு, தலா ஒவ்வொருவருக்கும் ரூ.25,000 பரிசுத் தொகையை வழங்கினா். வீரேந்திர சச்தேவா கூறுகையில், ‘41 உயிா்களைக் காப்பாற்றுவதில் இந்த ’எலி வளை’ சுரங்கத் தொழிலாளா்களின் விரைவான பணிக்காக நாடு எப்போதும் நன்றியுடன் இருக்கும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.