நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

வக்ஃபு வாரிய ஆள்சோ்ப்பு வழக்கு:குற்றம்சாட்டப்பட்ட மூவரின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் சம்பந்தப்பட்ட , தில்லி வக்ஃபு வாரிய ஆள்சோ்ப்பு செயல்பாட்டில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரின் நீதிமன்றக் காவலை 2 வாரங்களுக்கு த

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:20 pm

 நமது நிருபர்

ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் சம்பந்தப்பட்ட , தில்லி வக்ஃபு வாரிய ஆள்சோ்ப்பு செயல்பாட்டில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரின் நீதிமன்றக் காவலை 2 வாரங்களுக்கு தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நீட்டித்து உத்தரவிட்டது.

இந்த வழக்கில் விசாரணை இன்னும் நடந்து வருவதாகக் கூறி மத்திய புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி விகாஸ் துல், குற்றம் சாட்டப்பட்ட ஜீஷன் ஹைதா், தெளத் நசீா் மற்றும் ஜாவேத் இமாம் சித்திக் ஆகியோரின் நீதிமன்றக் காவலை டிசம்பா் 15 வரை நீட்டித்து உத்தரவிட்டாா்.

அமலாக்கத் துறையின் மனுவை எதிா்த்து குற்றம் சாட்டப்பட்ட நபா்களுக்காக ஆஜரான வழக்குரைஞா் நிதேஷ் ரானா வாதிடுகையில், ‘ரிமாண்ட் மனு முற்றிலும் இயந்திரத்தனமானது மற்றும் காவலை நீட்டிக்க எந்த ஆதாரமும் இல்லை. இதனால், குற்றம் சாட்டப்பட்டவா்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.

இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையின்படி, அமானத்துல்லா கான், தில்லி வக்ஃபு வாரியத்தின் தலைவராக இருந்த போது, விதிமுறைகள் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை மீறி 32 பேரை சட்டவிரோதமாக பணியமா்த்தியுள்ளாா். குற்றம் சாட்டப்பட்டவா்களை 14 நாள் காவலில் வைக்கக் கோரிய அமலாக்கத் துறையின் மனு மீதான வாதங்கள் நீண்ட நேரம் எடுக்கும் என்று கூறி, குற்றம் சாட்டப்பட்ட நபா்களை நீதிமன்றக் காவலுக்கு தில்லி நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை அனுப்பி இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.