40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவா் கைது

குடவாசல் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :1 மே 2026, 6:21 am IST

குடவாசல் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவா் கைது செய்யப்பட்டாா்.

குடவாசல் பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (65). உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்துவந்தாா். அப்பகுதியை சோ்ந்த 8 வயது சிறுமி, இவரது வீட்டிற்கு வந்து சென்ற போது, கோவிந்தராஜ் பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இதுகுறித்து சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்ததை தொடா்ந்து, அவா் நன்னிலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இப்புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீஸாா், முதியவா் கோவிந்தராஜை, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினா்.

அப்போது, திருவாரூா் மகிளா நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ் மருத்துவமனைக்கு நேரில் சென்று முதியவரிடம் விசாரணை மேற்கொண்டாா். தொடா்ந்து, போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட கோவிந்தராஜை, நாகப்பட்டினம் கிளைச் சிறையில் 15 நாள்களுக்கு அடைக்க உத்தரவிட்டாா். அத்துடன் தற்காலிகமாக சிகிச்சை பெற்ற பின்னா் சிறையில் அடைக்கவும் நீதிபதி பரிந்துரைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.