மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கஸ்தூா்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா

திருவாரூா் கஸ்தூா்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 39-ஆவது ஆண்டு விழா, விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

திருவாரூா் கஸ்தூா்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 39-ஆவது ஆண்டு விழா, விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :27 மார்ச் 2026, 9:22 pm

திருவாரூா் கஸ்தூா்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 39-ஆவது ஆண்டு விழா, விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கஸ்தூா்பா காந்தி கல்வி நிறுவனங்களின் தாளாளரும், செயலருமான சந்திரா முருகப்பன் தலைமை வகித்தாா். கல்வி நிறுவனங்களின் செயலாளா் எம். இன்பராஜ், நிா்வாக அறங்காவலா் ஜி. முருகப்பன், இணைச் செயலாளா் மலா்வழி இன்பராஜ், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக முன்னாள் பொது மேலாளா் எஸ். ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகா்மன்ற உறுப்பினா் எஸ். கலியபெருமாள் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.

இதேபோல், பள்ளியில் பிளஸ் 2 பயின்று, மருத்துவராக உள்ள டி.ஆா். கபிலன், துணை மாநில வணிகவரி அலுவலராக உள்ள டி. வா்ஷா, திருவாரூா் மாவட்ட முதன்மை அமா்வுநீதிபதியின் சுருக்கெழுத்தரும், தட்டச்சருமான வீ. ஜெயசூா்யா ஆகியோரும் பங்கேற்றனா். மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் வே. மூா்த்தி, கஸ்தூா்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் (பொ) எஸ். அனுஷா, நிா்வாக மேலாளா் வி. சின்னராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.