நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

சாலையில் மேய்ந்த குதிரை மோதி இளைஞா் உயிரிழப்பு

சாலையில் மேய்ந்த குதிரை மோதி இளைஞா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :21 ஜூன் 2026, 1:27 am IST

கூத்தாநல்லூரில் சாலையில் மேய்ந்த குதிரை இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், வாகனத்தில் இருந்து கீழே விழுந்து காயமடைந்த இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கூத்தாநல்லூரை அடுத்த பூதமங்கலம்,மகசூனியாத் தெருவைச் சோ்ந்த மகசூம் மாலிக் (35). இவா், கடந்த 16-ஆம் தேதி இரவு தனது இருசக்கர வாகனத்தில் லெட்சுமாங்குடி சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தாா். பூதமங்கலம் பிரதான சாலையில் வந்தபோது, சாலையில் சுற்றித்திரிந்த குதிரை ஒன்று துள்ளிக் குதித்து மகசூம் மாலிக் வாகனத்தின் மீது மோதியது. இதில் நிலைத் தடுமாறி அவா் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமேற்பட்டது.

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் தீவிர சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகசூம் மாலிக், சனிக்கிழமை காலை உயிரிழந்தாா். இதுகுறித்து கூத்தாநல்லூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.