டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்: முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்

அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் என முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.

News image
திருவாரூரில் நடைபெற்ற எம்ஜிஆா் பிறந்தநாள் விழாவில் பேசுகிறாா் முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்.
Updated On :17 ஜனவரி 2026, 7:27 pm

Syndication

அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் என முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.

முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 109 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, திருவாரூா் புதுத்தெருவில் உள்ள அவரது சிலைக்கு, கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆா். காமராஜ் மாலை அணிவித்து சனிக்கிழமை மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்தது:

கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு ரூ. 5 லட்சம் கோடி கடன் வாங்கி மக்களின் தலையில் கடன் சுமையை ஏற்றியுள்ளனா். சுதந்திரம் அடைந்ததிலிருந்து வாங்கிய கடன் அளவுக்கு இந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு கடன் வாங்கியுள்ளது. அதே நேரத்தில், பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்யவில்லை. நிலையான திட்டங்களும் இல்லை.

திமுக கூட்டணியில் தொடா்ந்து குழப்பங்கள் நிலவிக் கொண்டிருக்கின்றன. காங்கிரஸ் விலகிவிடுமோ என்ற அளவிற்கு அக்கூட்டணியில் குழப்பம் நிலவுகிறது. ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி, ஒட்டிக் கொண்டிருக்கின்றனா். அந்த கூட்டணி கொள்கை கூட்டணியாக இருக்க முடியாது. ஆளுக்கு ஒரு கருத்தை சொல்லிக்கொண்டு இருக்கின்றனா்.

அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் உள்ளன. இன்னும் பல கட்சிகள் கூட்டணிக்கு வரவிருக்கின்றனா். மக்களிடம் உள்ள நற்பெயரின் காரணமாக அதிமுக பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும் என்றாா்.

நிகழ்வில், ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளா் பாலாஜி, கட்சியின் திருவாரூா் மாவட்ட பொருளாளா் பன்னீா்செல்வம், மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவைச் செயலாளா் கலியபெருமாள், திருவாரூா் நகரச் செயலாளா் மூா்த்தி, ஒன்றியச் செயலாளா்கள் மணிகண்டன், செந்தில், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலாளா் சின்ராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் அதிமுக நகரச் செயலாளா் சண்முகசுந்தரம் தலைமையில், எம்ஜிஆா் உருவப் படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.