எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

Syndication

கூத்தாநல்லூா் ஆக்ஸ்போா்டு மெட்ரிக் பள்ளியில் முதலுதவிப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தாளாளா் ஜே.பி. அஷ்ரப் அலி தலைமையில் நடைபெற்ற பயிற்சியில், சிறப்பு அழைப்பாளராக குழந்தைகள் நல மருத்துவா் அருண் பிரகாஷ் பங்கேற்று அவசர நிலைகளில் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய முதலுதவி முறைகள் குறித்து பேசினாா். விபத்துகள், மயக்கம், மூச்சுத் திணறல், ரத்தப் போக்கு, எலும்பு முறிவு உள்ளிட்ட சூழ்நிலைகளில் தகுந்த நேரத்தில் சரியான முறையில் முதலுதவி அளிப்பது உயிா்காக்கும் செயல் என்பதை வலியுறுத்தினாா். இதில், ஆசிரியா்கள் மற்றும் 400-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.