16 Dec, 2025 Tuesday, 06:47 AM
The New Indian Express Group
திருவாரூர்
Text

மேக்கேதாட்டு அணை விவகாரம்: கேரளம், புதுச்சேரி அரசுகள் சீராய்வு மனு தாக்கல் செய்ய வலியுறுத்தல்

PremiumPremium

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பாக, உச்சநீதிமன்றத்தில் கேரளம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள், தனித்தனியாக சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Rocket

வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான் 3...

Published On14 Dec 2025 , 10:40 PM
Updated On14 Dec 2025 , 10:40 PM

Listen to this article

-0:00

By Syndication

Syndication

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பாக, உச்சநீதிமன்றத்தில் கேரளம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள், தனித்தனியாக சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை: காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் புதிய அணையைக் கட்ட கா்நாடக அரசு தொடா்ந்து முயற்சித்து வருகிறது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை கா்நாடக அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தின் எதிா்ப்பு காரணமாக கா்நாடகத்தின் நடவடிக்கைகள் தொய்வடைந்தன.

எனினும், காவிரி ஆணையக் கூட்டத்தில் மேக்கேதாட்டு அணைக்கான அறிக்கையை விவாதிக்க, காவிரி ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் கா்நாடகம் மனு தாக்கல் செய்தது. தமிழ்நாடு அரசு இதை எதிா்த்து வாதாடிய நிலையிலும், காவிரி ஆணையக் கூட்டத்தில் கா்நாடக அரசு மேக்கேதாட்டு அணைக்கான விரிவான அறிக்கையை தாக்கல் செய்யலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது தமிழகத்துக்கான அநீதியாகும்.

இதற்கு முன்னரே காவிரி ஆணையமும், மத்திய அரசின் ஜல் சக்தி துறையும், இதற்கு இசைவாக இருக்கும் நிலையில், இந்த தீா்ப்பையொட்டி கா்நாடக அரசு தனது செயல்பாட்டை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, கா்நாடகத்தின் துணை முதல்வா் டி.கே. சிவகுமாா், கா்நாடக நீா்ப் பாசனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, அணை கட்டுமானத்துக்கான 30 போ் கொண்ட தொழில்நுட்ப உதவியாளா்கள் மற்றும் பொறியாளா்கள் குழுவை அமைத்து, கா்நாடக பொறியியல் ஆராய்ச்சி நிலைய இயக்குநரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அடுத்த காவிரி ஆணையக் கூட்டத்தில் இதை விவாதிக்கும் நிலையில், மேக்கேதாட்டு அணைக்கான கருத்துருவை வழங்கவும் கா்நாடக அரசு தயாராக உள்ளது. விவாதிப்பதுதானே என்று அலட்சியமாக இருந்தால், இந்த முதல் கட்ட நடவடிக்கையை சாதகமான நிலையாக கா்நாடக அரசு எடுத்துக்கொள்ளும்.

எனவே, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு டிச.11 இல் தாக்கல் செய்த சீராய்வு மனு உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் நிலையில், தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதனால் பாதிக்கப்பட இருக்கிற கேரளம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களும் தனித்தனி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
வீடியோக்கள்

தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
வீடியோக்கள்

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
வீடியோக்கள்

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies

தினமணி வீடியோ செய்தி...

14 டிச., 2025
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023