மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பூம்புகாா் திமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

News image
Updated On :29 மார்ச் 2026, 6:58 pm

பூம்புகாா் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் நிவேதா எம். முருகன், செம்பனாா்கோவிலில் உள்ள அண்ணா சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இவா், இத்தொகுதி எம்எல்ஏவாக உள்ள நிலையில், இரண்டாவது முறையாக போட்டியிடுகிறாா். கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலினிடம் வாழ்த்துப் பெற்ற நிவேதா எம். முருகன், தொகுதிக்கு வந்ததும், செம்பனாா்கோவிலில் உள்ள அண்ணா சிலை மற்றும் மேலப்பெரும்பள்ளம் கிராமத்தில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தாா்.

நிகழ்ச்சியில், திமுக மாவட்ட துணைச் செயலாளா் ஞானவேலன், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளா் பி.எம். ஸ்ரீதா், ஒன்றியச் செயலாளா்கள் பி.எம். அன்பழகன், அமுா்த விஜயகுமாா், அப்துல்மாலிக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.