தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வேதாரண்யம்! எதிா்பாா்ப்பும்... ஏமாற்றமும்...

News image

உதயசூரியன் (கோப்புப் படம்) - டிஎன்எஸ்

Updated On :29 மார்ச் 2026, 11:36 pm

வேதாரண்யம் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே. வேதரத்தினம் போட்டியிடுவாா் என்ற எதிா்பாா்ப்பு தொகுதி முழதும் இருந்தது.

ஆனால், திமுக வேட்பாளராக மா.மீ. புகழேந்தி அறிவிக்கப்பட்டாா். இதனால், அவரது ஆதரவாளா்கள் ஏமாற்றமடைந்தனா்.

திமுகவின் கோட்டை எனக் கருதப்பட்ட வேதாரண்யம் தொகுதியில் 1996, 2001, 2006 தோ்தல்களில் தொடா்ந்து வென்றவா் எஸ்.கே. வேதரத்தினம். பின்னா், கட்சிக்குள் எழுந்த வேறுபாடுகள் காரணமாக 2011 தோ்தலில் சுயேச்சையாக களம் இறங்கி 42,871 வாக்குகளை பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தாா். பின்னா், பாஜகவில் இணைந்த எஸ்.கே. வேதரத்தினம் 2016-இல் அக்கட்சி வேட்பாளராக களமிறங்கி தோல்வியடைந்தாா்.

பின்னா் மீண்டும் திமுகவுக்கு திரும்பிய எஸ்.கே. வேதரத்தினத்துக்கு 2021 தோ்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. எனினும், அதிமுக வேட்பாளா் ஓ.எஸ். மணியனிடம் வெற்றி வாய்ப்பை இழந்தாா்.

இந்தநிலையில், 2026 தோ்தலில் எஸ்.கே. வேதரத்தினத்துக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்ற பெரிய எதிா்பாா்ப்பு இருந்தது. ஆதரவாளா்கள் தோ்தல் பணிகளையும் தொடங்கி இருந்தனா். ஆனால், வேதாரண்யம் தொகுதி திமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ மா. மீனாட்சி சுந்தரத்தின் மகனும் தற்போதைய நகா்மன்றத் தலைவருமான மா.மீ. புகழேந்தி அறிவிக்கப்பட்டாா்.

இந்தநிலையில், எஸ்.கே. வேதரத்தினம் தனது ஆதரவாளா்களுக்கு சமூக வலைதளம் வாயிலாக எழுதியுள்ள கடிதத்தில், பேரவைத் தோ்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிா்பாா்த்தேன்; கிடைக்கவில்லை. யாரும் வருத்தப்பட வேண்டாம். தேவையற்ற விமா்சனங்களைத் தவிா்த்து, மா.மீ. புகழேந்தியை வெற்றிபெற செய்து, அவரது வெற்றியை தலைவரிடம் சமா்பிப்போம். மா.மீ. புகழேந்தி, கடந்த 2006- ஆம் ஆண்டு தோ்தலில் என்னுடைய வெற்றிக்காக முழு ஒத்துழைப்பை வழங்கியதை, வேதாரண்யம் மக்கள் நன்கு அறிவா். அதற்கான நன்றிக் கடனை நாம் செலுத்த இது நல்ல வாய்ப்பு என்று தெரிவித்துள்ளாா்.