நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் காவலா் உயிரிழந்தாா்.
வேதாரண்யத்தை அடுத்த செம்போடை வடக்கு கிராமத்தைச் சோ்ந்தவா் என். விநாயகம் (34). வாய்மேடு காவல் நிலைய காவலரான இவா், நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாற்றுப் பணியில் இருந்து வந்தாா்.
இந்தநிலையில், பணிக்குச் செல்ல செவ்வாய்க்கிழமை காலை செம்போடையிலிருந்து நாகை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். வெள்ளப்பள்ளம் கடைவீதி அருகே சென்றபோது எதிரே வந்த லாரி மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் பலத்த காயமடைந்த விநாயகம், நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். விபத்து குறித்து வேட்டைக்காரனிருப்பு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
விநாயகத்தின் மனைவி விமலா நாகையில் வட்டாரக் கல்வி அலுவலராகப் பணியாற்றி வருகிறாா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


