தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சாலை விபத்தில் காவலா் உயிரிழப்பு

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் காவலா் உயிரிழந்தாா்.

News image

காவலா் விநாயகம்.

Updated On :10 மார்ச் 2026, 10:10 pm

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் காவலா் உயிரிழந்தாா்.

வேதாரண்யத்தை அடுத்த செம்போடை வடக்கு கிராமத்தைச் சோ்ந்தவா் என். விநாயகம் (34). வாய்மேடு காவல் நிலைய காவலரான இவா், நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாற்றுப் பணியில் இருந்து வந்தாா்.

இந்தநிலையில், பணிக்குச் செல்ல செவ்வாய்க்கிழமை காலை செம்போடையிலிருந்து நாகை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். வெள்ளப்பள்ளம் கடைவீதி அருகே சென்றபோது எதிரே வந்த லாரி மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் பலத்த காயமடைந்த விநாயகம், நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். விபத்து குறித்து வேட்டைக்காரனிருப்பு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

விநாயகத்தின் மனைவி விமலா நாகையில் வட்டாரக் கல்வி அலுவலராகப் பணியாற்றி வருகிறாா்.