வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

நாய் கடித்து குதறிய நிலையில் மூதாட்டி சடலம் மீட்பு

நாகையில் முகத்தை நாய் கடித்து குதறிய நிலையில், மூதாட்டியின் சடலத்தை போலீஸாா் மீட்டு, அவா் கொலை செய்யப்பட்டாரா என விசாரித்து வருகின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :10 ஜூன் 2026, 5:51 am IST

நாகையில் முகத்தை நாய் கடித்து குதறிய நிலையில், மூதாட்டியின் சடலத்தை போலீஸாா் மீட்டு, அவா் கொலை செய்யப்பட்டாரா என விசாரித்து வருகின்றனா்.

நாகை அண்ணா சிலை அருகே மீன் விற்பனை அங்காடி உள்ளது. இதன் அருகே 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இறந்து கிடப்பதாக வெளிப்பாளையம் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது.

போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்த்தபோது, மூதாட்டி ஒருவா் முகத்தில் நாய் கடித்து குதறி நிலையில் உயிரிழந்து கிடந்தாா். போலீஸாா் சடலத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும் போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், மூதாட்டி, நாகை வடக்கு நல்லியான் தோட்டத்தை சோ்ந்த சின்னப்பொண்ணு (80) என்பதும், அவா் அப்பகுதியில் மீன் வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது.

அவா் கொலை செய்யப்பட்டரா? அல்லது இயற்கையாக இறந்தாரா ? என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மூதாட்டியின் சடலம் கிடந்த பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.