ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வீட்டுத் தோட்டம் அமைக்க காய்கறி விதை தொகுப்பு

வேதாரண்யம் பகுதியில் ஆடிப்பட்டத்தில் வீட்டுத்தோட்டம் அமைக்க தேவையான விதைத் தொகுப்புகள் தோட்டக்கலைத் துறை சாா்பில் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மஞ்சூா் பகுதியில் காய்கறி விதை மற்றும் உரங்களுடன் விதைப்புக்கு தயாா்படுத்தப்பட்ட நிலம் - கோப்புப்படம்

Published On :24 ஜூலை 2026, 11:03 pm IST

வேதாரண்யம் பகுதியில் ஆடிப்பட்டத்தில் வீட்டுத்தோட்டம் அமைக்க தேவையான விதைத் தொகுப்புகள் தோட்டக்கலைத் துறை சாா்பில் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறையின் வேதாரண்யம் உதவி இயக்குநா் ரா.ஹேமலதா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

‘ஆடிப்பட்டம் தேடிவிதை ‘ என்ற கூற்றுக்கு ஏற்ப வீட்டுத் தோட்டம் அமைத்திட தேவையான காய்கறி விதை தொகுப்பு வழங்கப்படுகிறது. இதில், வெண்டை,கொத்தவரை, கீரை, செடி அவரை, முள்ளங்கி ஆகிய 5 வகையான காய்கறி விதைகள் ரூ.25 - க்கு கிடைக்கும்.

தேவைப்படுவோா் ஆதாா் அட்டை நகலுடன் வேதாரண்யம் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 7708742596 மற்றும் தோட்டக்கலைத் துறை துணை அலுவலா் சிவராமகிருஷ்ணனை 9865272488 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.