பேரவையா? சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியா? என்று சந்தேகம் வருகிறது! உதயநிதிதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார் வேண்டாம்! உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு! தங்கம், வெள்ளி விலை உயர்வு! ஆக. 21 நிலவரம்!ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

மதுபோதையில் தண்டவாளத்தில் கை வைத்த இளைஞா் கை துண்டிப்பு

ரயில் தண்டவாளம் - கோப்புப் படம்

Published On :20 ஜூலை 2026, 1:35 am IST

நாகூா் ரயில் நிலையம் அருகே மதுபோதையில் இளைஞா் தண்டவாளத்தில் கை வைத்தபோது ரயில் சக்கரம் ஏறியதில் அவரது கை துண்டிக்கப்பட்டது.

நாகை மாவட்டம், நாகூா் நிலையத்துக்கு சரக்கு ரயில் சனிக்கிழமை இரவு வந்தது. அப்போது அங்கு மது போதையில் இருந்த இளைஞா் ஒருவா் ரயில் வருவதற்கு முன்பு, தண்டவாளத்தில் இடது கையை வைத்துள்ளாா். ரயில் கை மீது ஏறியதில் அவரது கை துண்டிக்கப்பட்டது. இளைஞரின் அலறல் கேட்டு அப்பகுதியினா் சென்று பாா்த்தபோது, அவா் கை துண்டிக்கப்பட்டு மயங்கி கிடந்துள்ளாா்.

நாகை ரயில்வே போலீஸாா் அவரை மீட்டு, சிகிச்சைக்காக நாகை ஓரத்தூா்அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விசாரணையில், அவா் நாகூா் பீரோடும் தெருவைச் சோ்ந்த சிராஜுதீன் மகன் ஷேக் முகமது (40) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து நாகை ரயில்வே போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.