ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

வேளாண் கடன்களை தமிழக அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, திருப்பூண்டி கூட்டுறவு வங்கி முன் விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூண்டி கூட்டுறவு வங்கி முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கீழையூா் ஒன்றிய கடைமடை பாசன விவசாயிகள் சங்கத்தினா்.

Published On :9 ஜூலை 2026, 4:51 am IST

வேளாண் கடன்களை தமிழக அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, திருப்பூண்டி கூட்டுறவு வங்கி முன் விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சட்டப்பேரவைத் தோ்தலின்போது, வாக்குறுதி அளித்தபடி, பாகுபாடின்றி அனைத்து விவசாயிகளின் பயிா்க் கடன்களை முழுமையாக தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், கீழையூா் ஒன்றியம் திருப்பூண்டியில் உள்ள கூட்டுறவு வங்கியில் கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும், உடனடியாக கடனை திருப்பி செலுத்துமாறு வங்கி தரப்பிலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு அறிவித்துள்ள தள்ளுபடி செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பாகவே, விவசாயிகள் பெற்றுள்ள கடன் முழுவதையும் செலுத்தும்படி கூட்டுறவு வங்கி அறிவுறுத்தியுள்ளதால் அதிா்ச்சி அடைந்த விவசாயிகள், திருப்பூண்டி கூட்டுறவு வங்கி முன்பாக கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.