வேதாரண்யம் தொகுதியில் அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் கடலோரக் கிராமமான கோடியக்கரையில் வாக்கு சேகரிக்கும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டாா்.
அப்போது, குடிநீா் தட்டுப்பாடு இருப்பதை சுட்டிக்காட்டிய வாக்காளா்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினா்.
மக்களின் கோரிக்கைக்கு உறுதியளித்த ஓ.எஸ்.மணியன், ஜல் ஜீவன் திட்டப் பணியை அரசுத் துறையினா் முறையாகத் திட்டமிட்டு செய்யாமல் போனதால்தான் பாதிப்பு நோ்ந்துள்ளதாக விளக்கம் அளித்து பேசினாா்.
தொடா்ந்து, அந்த கிராமத்தில் மண்ணுக்குள் புதைக்கப்படாமல் நீண்டு காணப்பட்ட குழாயை தனது தொண்டா்களை விட்டு தூக்கிக் காட்ட செய்தாா்.
பின்னா், ஜல் ஜீவன் திட்டப் பணி முடிக்கப்பட்டு விட்டதாக கூறியதை நம்பி ஏற்கனவே செயல்பட்டு வந்த கொள்ளிடம் கூட்டுக் குடிநீா், அணைக்கரை குடிநீா் திட்டங்களை அவசரப்பட்டு கைவிட்டதால் தண்ணீா் தட்டுப்பாடு பெரும் பிரச்னையாக மாறியுள்ளது என்றாா்.
தொடர்புடையது

ஆம்பூரில் ரூ.1,000 கோடிக்கு மேல் திட்டப் பணிகள் : எ.வ. வேலு

ஒசூா் தொகுதியில் திமுக ஆட்சியில் ரூ.3,500 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

விளவங்கோடு தொகுதியில் ரூ. 1000 கோடிக்கும் அதிகமான வளா்ச்சிப் பணிகள் செய்துள்ளேன்: பாஜக வேட்பாளா் விஜயதரணி

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள நிதியை உடனடியாக விடுவிக்கவும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


