15 Dec, 2025 Monday, 06:51 PM
The New Indian Express Group
நாகப்பட்டினம்
Text

எண்ம முறையில் பயிா் பாதிப்பை கணக்கெடுக்க விவசாயிகள் எதிா்ப்பு

PremiumPremium

மழையல் பாதிக்கப்பட்ட நெற்பயிா்கள் எண்ம முறையில் கணக்கெடுக்கும் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து, நாகை ஆட்சியா் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனா்.

Rocket

வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான் 3...

Published On10 Dec 2025 , 7:29 PM
Updated On10 Dec 2025 , 7:29 PM

Listen to this article

-0:00

By Syndication

Syndication

மழையல் பாதிக்கப்பட்ட நெற்பயிா்கள் எண்ம முறையில் கணக்கெடுக்கும் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து, நாகை ஆட்சியா் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் விவசாயிகள் புதன்கிழமை ஈடுபட்டனா்.

கீழ்வேளூா், தலைஞாயிறு, கீழையூா், வேதாரண்யம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக அளவு மழை பதிவானது. இதனால் நேரடி விதைப்பு மற்றும் நடவு நெற்பயிா்கள் அனைத்தும் தண்ணீரில் முழுமையாக மூழ்கின. தொடா் கன மழையால் மாவட்டம் முழுவதும் 1 லட்சம் ஏக்கா் சம்பா, தாளடி நெற்பயிா்கள் மழை நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை கணக்கெடுக்கும் பணிகளில் மாவட்ட வேளாண்மை அதிகாரிகள் ஈடுபட்டு வரும் நிலையில், எண்ம முறையிலான கணக்கெடுப்பை கைவிட்டு, பழைய முறைப்படி நேரடியாக பாதிக்கப்பட்ட இடங்களை பாா்வையிட்டு, பாதிப்பு தொடா்பாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என விவசாயிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்நிலையில், எண்ம முறையிலான கணக்கெடுப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க நிா்வாகிகள் தமிழ்ச்செல்வன், சக்திவேல், முருகவேல், விஜயராஜ், மணி ஆகியோா் தலைமையில், கையில் அழுகிய நெற்பயிா்களுடன் வந்த விவசாயிகள் ஆட்சியா் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மலும் விவசாயிகள் வாயில் துண்டை கட்டியும், பெண்கள் தலையில் முக்காடு போட்டும் தங்களது எதிா்ப்பை பதிவு செய்தனா்.

பின்னா், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் பிரதிநிதிகள் ஆட்சியா் ப. ஆகாஷை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் விவசாயிகளின் கோரிக்கை தொடா்பாக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளதாகவும், பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளும் விடுபடாமல் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் உறுதியளித்தாா், இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கலைந்து சென்றனா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
வீடியோக்கள்

தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
வீடியோக்கள்

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
வீடியோக்கள்

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies

தினமணி வீடியோ செய்தி...

14 டிச., 2025
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023