அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

காரைக்காலில் இருந்து புலம்பெயர்ந்த ஒடிசா தொழிலாளர்கள்  ரயிலில் அனுப்பிவைப்பு 

காரைக்காலில் இருந்து ஒடிசா மாநிலத்திற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரயிலில் வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டனர். 

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:42 pm

DIN

காரைக்காலில் இருந்து ஒடிசா மாநிலத்திற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரயிலில் வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டனர். 

காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு தொழிற்சாலைகளில் பணி செய்துவந்த ஒடிசா மாநிலத்தவர்கள் செல்வதற்கு ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயிலை வியாழக்கிழமை காரைக்காலுக்கு அனுப்பிவைத்தது.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் தங்கியிருந்து ஒடிசா செல்ல விண்ணப்பித்திருந்தவர்களில் 186 தொழிலாளர்களை பி.ஆர்.டி.சி. பேருந்தில் மாவட்ட ஆட்சியரகம் அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவப் பரிசோதனை, ஆதார் சோதனைகள் செய்யப்பட்டு டிக்கெட் தரப்பட்டது.

திருச்சி வட்டாரத்தில் இருந்த ஒடிசாவை சேர்ந்தோர் 289 பேர் தமிழக, புதுச்சேரி அரசின் ஒப்புதலின்படி பேருந்தில் காரைக்காலுக்கு அழைத்துவரப்பட்டனர்.  காரைக்காலை சேர்ந்த 186 பேரும், திருச்சியிலிருந்து வந்த 289 பேரும் சிறப்பு ரயிலில் ஏறினர். 

காரைக்கால்  மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா  ரயில் நிலையத்தில் தொழிலாளர்கள் இருந்த சிறப்பு ரயிலை கொடியசைத்து இயக்கிவைத்தார். 

அனுப்பிவைக்கும் நிகழ்வில் மாவட்ட துணை ஆட்சியர் எம்.ஆதர்ஷ்,  முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் பர்ன்வால், மண்டல காவல் கண்காணிப்பாளர்கள் கே.எல்.வீரவல்லபன், ரகுநாயகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 இந்த சிறப்பு ரயில் மாலை 6 மணிக்குப் புறப்பட்டது. புதுச்சேரி வழியாக ரயில் செல்கிறது எனவும், 30-ஆம் தேதி ஒடிஸா சென்றடையும் என ரயில்வே வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.