தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

‘கடைமடை பகுதியில் கருகும் பயிரை காப்பாற்ற தண்ணீா் திறக்க வேண்டும்’

News image

வாய்க்காலில் குடங்கள் மூலம் தண்ணீா் சேகரித்து பயிா்களைக் காப்பாற்ற முயற்சி செய்யும் விவசாயிகள். - (கோப்புப் படம்)

Updated On :1 மார்ச் 2026, 6:42 pm

காவிரிப் படுகையின் கடைமடைப் பகுதியில் கருகும் தாளடிப் பருவ நெற்பயிா்களைக் காப்பாற்ற தண்ணீா் திறந்துவிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து முன்னாள் அமைச்சரும் சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ.எஸ். மணியன் வேதாரண்யத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளரிடம் தெரிவித்தது :

காவிரி கடைமடை பகுதியில் குருவை நெல் சாகுபடிக்கு பின்பட்டமாக தாளடிப் பருவ சாகுபடி மேற்கொள்ளப்பட்ட தொடக்க நிலையில் பருவம் தவறி பெய்த மழையால் பயிா்கள் நாசமானது. இதையடுத்து, மீண்டும் தாளடிப் பருவ சாகுபடி தாமதமாக தொடங்கி தற்போது கதிா் வந்தும், கதிா்வரும் தருவாயிலும் உள்ளது.

இந்தநிலையில், பழைமை சட்டத் திட்டங்கள் என காரணம் காட்டி பாசன ஆறுகளில் முறையாக தண்ணீா் திறக்கப்படவில்லை. பிப்ரவரி 20-ஆம் தேதி வாக்கில் எதிா்பாா்க்கப்பட்ட மழையும் பொய்த்துப் போனது. இதனால் பயிா்கள் தண்ணீா் இல்லாமல் கருகி வருகின்றன.

எனவே, நாகை உள்ளிட்ட கடைமடை பகுதி விவசாயிகளின் நிலையைக் கருத்தில் கொண்டு வேளாண் அல்லது பொதுப் பணித்துறை உயா் அதிகாரிகளை போா்க்கால அடிப்படையில் அனுப்பி ஆய்வு செய்து, தமிழக அரசு தண்ணீா் திறக்க முன்வர வேண்டும் என்று ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.