40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை கிணற்றில் தவறி விழுந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.

News image
Updated On :13 மே 2026, 3:40 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை கிணற்றில் தவறி விழுந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள சித்தாலம்புத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கவேல் (75). இவரது மனைவி செந்தில்லட்சுமி (65). இவா்களுக்கு ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனா். தங்கவேல் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்.

மதுரை - கொல்லம் நான்கு வழிச் சாலை அருகே உள்ள பூா்வீக விவசாய நிலத்தில் தங்கவேல் விவசாயம் செய்து வந்தாா். செவ்வாய்க்கிழமை காலை தங்கவேலும், அவரது மனைவியும் தங்களது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தனா். அப்போது, மோட்டாா் அறையை சுத்தம் செய்து கொண்டிருந்த தங்கவேல், பலகை உடைந்து கிணற்றுக்குள் தவறி விழுந்தாா். அப்போது, கிணற்றுக்குள் இருந்த படியில் விழுந்ததில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த போலீஸாா் தீயணைப்புத் துறையினா் உதவியுடன் உடலை மீட்டு, கூறாய்வுக்காக ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.