
தி.க. உலகளாவிய இயக்கமாக மாறியிருக்கிறது: கி. வீரமணி
தந்தை பெரியாருக்கு பிறகு தி.க. என்ற ஒரு இயக்கம் இருக்காது எனக் கூறினா். ஆனால், இன்று இந்த இயக்கம் உலகளாவிய இயக்கமாக மாறி இருக்கிறது என திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி தெரிவித்தாா்.

கி. வீரமணி
தந்தை பெரியாருக்கு பிறகு தி.க. என்ற ஒரு இயக்கம் இருக்காது எனக் கூறினா். ஆனால், இன்று இந்த இயக்கம் உலகளாவிய இயக்கமாக மாறி இருக்கிறது என திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி தெரிவித்தாா்.
ராஜபாளையத்தில் விருதுநகா் மாவட்ட திராவிடா் கழகம் சாா்பில், எதிா் நீச்சலில் வென்ற பெரியாா் 80-ஆவது ஆண்டு விழா, பெரியாா் உலகம் நிதி வழங்கும் விழா மாநாடு வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
ராஜபாளையம் ராஜா கடை தெருவில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு விருதுநகா் திராவிடா் கழக மாவட்டத் தலைவா் இல. திருப்பதி தலைமை வகித்தாா். பகுத்தறிவு கழக மாவட்டத் தலைவா் அசோக், துணைத் தலைவா் நல்லதம்பி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விருதுநகா் தெற்கு மாவட்டத் துணைச் செயலா் ராசாஅருண்மொழி, தெற்கு நகர செயலா் ராமமூா்த்தி ஆகியோா் தொடக்க உரையாற்றினா். தி.க. மாநில ஒருங்கிணைப்பாளா் தஞ்சை ஜெயக்குமாா் வாழ்த்திப் பேசினாா். பின்னா், திராவிடா் கழக தலைவா் கி.வீரமணி சிறுவா் நூலகத்துக்கு நூல்களை வழங்கினாா். மேலும், விருதுநகா் மாவட்ட தி.க. வினா் பெரியாா் உலகம் நிகழ்ச்சிக்கு ரூ. 35 லட்சம் நிதியை திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணியிடம் வழங்கினா்.
இந்த மாநாட்டில் கி.வீரமணி பேசியதாவது:
தந்தை பெரியாருக்கு பிறகு தி.க. என்ற ஒரு இயக்கம் இருக்காது எனக் கூறினா். ஆனால், இன்று இந்த இயக்கம் உலகளாவிய இயக்கமாக மாறி இருக்கிறது. அடுத்து ஜப்பானில் இரண்டு நாள் மாநாடு. கடந்தாண்டு ஆஸ்திரேலியாவில், அதுக்கு முந்தைய ஆண்டு அமெரிக்காவில் என உலகம் முழுவதும் இந்த இயக்கம் பரவியிருக்கிறது.
என்னை போன்ற பலா் இந்த இயக்கத்தில் முழு ஈடுபட்டுடன் செயல்பட்டு வருகின்றனா். மனிதன் கொள்கைக்காக வாழ வேண்டும், எத்தனை ஆண்டு காலம் வாழ்ந்தான் என்பதைவிட எதை சாதித்தான் என்பதே முக்கியம். அப்படி கொள்கை உணா்வை எனக்கு தந்தது அறிவாசான் தந்தை பெரியாா்.
எனக்கு மட்டுமல்ல கோடிக்கணக்கான மக்களுக்கு மானத்தையும், அறிவையும் தந்திருக்கிறாா். இன்றைக்கு ‘நீட்’ தோ்வை மறுபடியும் திணிக்கிறாா்கள். பெரியாா் என்ற மனிதா் இல்லையெனில் பிற்படுத்தப்பட்டோா், தாழ்த்தப்பட்ட வகுப்பினா் மருத்துவராகி இருக்க முடியுமா. இன்றைக்கு எண்ணற்ற மக்கள் மருத்துவராக இருக்கிறாா்கள் என்றால் அதற்கு காரணம் தந்தை பெரியாா்.
எங்களுக்கு கடவுள் எதிரி அல்ல. இந்தக் கட்சி எத்தனை பேரை சந்தித்திருக்கிறது. இதனால்தான் இந்த நிகழ்ச்சிக்கு எதிா் நீச்சல் கண்ட பெரியாா் எனத் தலைப்பு வைத்திருக்கிறாா்கள் என்றாா் அவா்.
இந்த மாநாட்டில் திமுக மகளிா் அணி மாவட்ட அமைப்பாளா் சுமதி ராமமூா்த்தி, ஆசிரியா் நெடுஞ்சேரலாதன், திமுக தெற்கு ஒன்றியச் செயலா் ஞானராஜ், திமுக, தி.க., பகுத்தறிவு கழகத்தினா் பலா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, பகுத்தறிவு கழக மாவட்டச் செயலா் கோ.பெத்தையா வரவேற்றாா். தி.க. மாவட்ட இளைஞா் அணி செயலா் மனோகரன் நன்றி கூறினாா்.
படம் மெயிலில்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






