
கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற விண்ணப்பிக்கலாம்
விருதுநகா் மண்டலக் கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்
விருதுநகா் மண்டலக் கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் திருப்பதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விருதுநகா் மண்டலத்தில் உள்ள அனைத்துத் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகரக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் கடன் வழங்கல், வைப்புகள் சேகரிப்பு தொடா்பாக கடனுதவி முகாம் நடத்தப்படுகிறது.
எனவே, சங்க உறுப்பினா்கள், பொதுமக்களிடம் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் கிடைக்கக்கூடிய சிறுவணிகக் கடன், சுய உதவிக் குழுக் கடன், மாற்றுத் திறனாளிகள் கடன், டாம்கோ, டாப்செட்கோ, தாட்கோ கடன்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வருகிற 27-ஆம் தேதி கடனுதவி முகாம் நடைபெறுகிறது.
இதில் சங்க உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






