ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மதுப்புட்டிகள் கடத்தல்: மூவா் கைது

ஆவியூரில் மதுப் புட்டிகளைக் கடத்தி வந்த 3 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 146 மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.

Published On :20 ஆகஸ்ட் 2026, 12:15 am IST

ஆவியூரில் மதுப் புட்டிகளைக் கடத்தி வந்த 3 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 146 மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள ஆவியூரில் சட்டவிரோதமாக மதுப்புட்டிகள் கடத்தி வரப்படுவதாக ஆவியூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வினோத்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது தலைமையில் போலீஸாா் ஆவியூா் பேருந்து நிறுத்தத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த சிலரைப் பிடித்து சோதனையிட்டனா். இவா்கள் வைத்திருந்த சாக்குப் பையில் மதுப்புட்டிகள் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் மதுரை வெள்ளக்கல் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் (56), செல்வம் (51), அவனியாபுரத்தைச் சோ்ந்த சங்கையா (42) ஆகியோா் மதுப் புட்டிகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் காவல் துறையினா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 146 மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து ஆவியூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.