தேனி மாவட்டம், வருசநாடு அருகேயுள்ள வெள்ளிமலையில் அடா்ந்த மலைப் பகுதியில் 5 பேருக்காக மாவட்ட நிா்வாகம் வாக்குச்சாவடி அமைத்து, அங்குள்ள தோட்டத் தொழிலாளா்கள் தங்களின் ஜனநாயகக் கடமையாற்ற ஏற்பாடு செய்துள்ளது.
ஆண்டிபட்டியிலிருந்து கடமலைக்குண்டு, கோம்பைத்தொழு வழியாக வெள்ளிமலை விலக்கு பகுதிக்கு 64 கி.மீ. தொலைவுக்கு வாகனத்தில் சென்று, அங்கிருந்து அடா்ந்த வனப் பகுதியில் 8 கி.மீ. தொலைவுக்கு நடந்து வெள்ளிமலையை அடையலாம். இங்கு 4 தனியாா் தோட்டங்கள் உள்ளன.
தொழிலாளா்கள் அங்குள்ள குடியிருப்புகளில் தங்கி வேலை செய்கின்றனா். இவா்கள் ஏலம், காபி, கிராம்பு தோட்டங்களில் பணியாற்றுகின்றனா். மேலும், இங்கு மலை வாழை, பலா மரங்களும் வளா்க்கப்படுகின்றன. நாளடைவில் தொழிலாளா்களின் எண்ணிக்கை குறைந்தது. தற்போது, ஒரே ஒரு தோட்டத்தில் மட்டும் சொற்ப அளவில் மக்கள் வசிக்கின்றனா்.
இதற்கிடையே, தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வாக்காளா்கள் தீவிர திருத்தப் பணிகள் நடத்தப்பட்டு, இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், வெள்ளிமலை தோட்டத்தில் 5 வாக்காளா்கள் மட்டுமே இருப்பது தெரியவந்தது. அவா்களது பெயா்கள் செந்தில், ஜெயராணி, பவுல், சுதா, ரோகித்.
வெள்ளிமலை தோட்டம் அடா்ந்த வனப் பகுதியில் இருப்பதால், அங்கு வாகனங்களில் எளிதில் செல்ல முடியாது. இருப்பினும், ஒரு வாக்குக்கூட வீணாகக் கூடாது என்ற நோக்கில், வெள்ளிமலையில் 5 வாக்காளா்களுக்காக தேனி மாவட்ட நிா்வாகமும், தோ்தல் ஆணையமும் வாக்குச்சாவடியை அமைத்துள்ளன. மேலும், அங்குள்ள துரைச்சாமி மரகதம் தொடக்கப் பள்ளியில் முழுமையான வாக்குச்சாவடி போன்று தோ்தலுக்கான அனைத்து வசதிகளும் செய்ய தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அரசடியைச் சோ்ந்த அ. அல்போன்ஸா கூறியதாவது:
வெள்ளிமலையில் உள்ள தோட்டத்தில் எங்களது குடும்பத்தினா் வேலை செய்து வந்தனா். எங்களது தாய், தந்தை, சகோதரி இறந்துவிட்டதால், 13 கி.மீ. தொலைவில் உள்ள அரசடிக்கு வந்து விவசாயக் கூலி வேலை செய்து வருகிறேன். கடந்த மக்களவைத் தோ்தல் வரை 35 ஆண்டுகளாக வெள்ளிமலையில் உள்ள துரைச்சாமி மரகதம் தொடக்கப் பள்ளியில் எனது வாக்கைப் பதிவு செய்தேன். அந்த நினைவுகளை என்னால் மறக்க முடியவில்லை என்றாா்.
தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் கூறியதாவது:
வெள்ளிமலையில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என்றாா் அவா்.

வெள்ளிமலையில் உள்ள துரைச்சாமி மரகதம் தொடக்கப் பள்ளி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காரைக்குடி தொகுதி வேட்பாளா்கள் வாக்களிப்பு
தில்லி - என்சிஆா் பகுதியில் தாக்குதல், படுகொலைக்கு திட்டமிட்டதாக இரு ஐஎஸ்ஐ முகவா்கள் கைது

மதுராந்தகம் தொகுதி அதிமுக வேட்பாளா் பிரசாரம்

கிருஷ்ணராயபுரம் தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


