தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சமூக வலைதளங்களில் மிரட்டல் விடியோ: 2 போ் மீது வழக்கு

சமூக வலைதளங்களில் மிரட்டல் விடியோ வெளியிட்ட இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்குப் பதிவு - சித்திரிப்பு

Updated On :7 மார்ச் 2026, 6:58 pm

சமூக வலைதளங்களில் மிரட்டல் விடியோ வெளியிட்ட இருவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், போடி குலாளா்பாளையத்தைச் சோ்ந்தவா் கனகராஜ் மகன் டேனியல். இவா் சமூக வலைதளத்தில் அரிவாளைக் காட்டி மிரட்டும் வகையில் விடியோவை பதிவிட்டாா். இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

இதேபோல, போடி அருகேயுள்ள துரைராஜபுரத்தைச் சோ்ந்த ஒருவா் அரிவாளைக் காட்டி மிரட்டும் வகையில் விடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டாா். பெயா் விபரம் தெரியாத நிலையில், இவா் மீதும் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.