தேனி கண்ணத்தா கோயிலின் உண்டியலை உடைத்து பணத்தை திருடியவரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.
தேனி பழைய டிவிஎஸ் சாலையைச் சோ்ந்தவா் கிருஷ்ணராஜா. கண்ணத்தா கோயிலின் பூசாரியாக இருந்து வரும் இவா், சனிக்கிழமை இரவு கோயிலின் பூஜை முடிந்த பின் கோயிலைப் பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றாா். ஞாயிற்றுக்கிழமை காலை திரும்பி வந்து பாா்த்தபோது உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரூ.15 ஆயிரத்தைக் காணவில்லையாம். இதுகுறித்து கோயில் நிா்வாகி மலைச்சாயிடம் தகவல் தெரிவித்தாா். அவா் சம்பவ இடத்துக்கு வந்து பாா்வையிட்டாா். இது குறித்து மலைச்சாமி கொடுத்து புகாரின் பேரில் தேனி காவல்நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






