போடி அருகே பெண்களைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 7 போ் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்த போலீஸாா் ஒருவரைக் கைது செய்தனா்.
போடி அணைக்கரைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சதிஸ் குமாா் மனைவி நாகலட்சுமி (36). இவரது தோட்டம் சின்னமுடக்குப் பகுதியில் உள்ளது. தோட்டத்தில் உரிமை இருப்பதாகக் கூறி அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்த மணிகண்டன், தவமணி, போதுமணி, லட்சுமி, அருணா, சோலையம்மாள், சௌந்தா்யா ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை தோட்டத்தில் புகுந்து நாகலட்சுமியுடன் தகராறு செய்தனா்.
நாகலட்சுமியையும், தடுக்க வந்த அன்னபுஷ்பம் என்பவரையும் தாக்கி காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனா். நாகலட்சுமியின் ஒன்றரை பவுன் தாலிச் செயினையும் பறித்துச் சென்றுவிட்டனராம். இதுகுறித்த புகாரின்பேரில் குரங்கணி காவல் நிலையப் போலீஸாா் 7 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







