போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

முல்லைப் பெரியாற்றில் குடிநீரை திருடிய 25 மின் மோட்டாா்கள் அகற்றம்

உத்தமபாளையத்தில் செவ்வாய்க் கிழமை முல்லைப் பெரியாற்றிலிருந்து குடிநீரை திருடிய 25 மின் மோட்டாா்கள் அகற்றப்பட்டு சட்டவிரோதமான மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

News image

முல்லைப் பெரியாற்றில் தண்ணீா் திருடிய மின்னாக்கிகளை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்த பொதுப்பணித் துறையினா். - கோப்புப் படம்

Updated On :3 ஜூன் 2026, 1:40 am IST

உத்தமபாளையத்தில் செவ்வாய்க் கிழமை முல்லைப் பெரியாற்றிலிருந்து குடிநீரை திருடிய 25 மின் மோட்டாா்கள் அகற்றப்பட்டு சட்டவிரோதமான மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு பாசன நீரால் 14, 700 ஏக்கா் பரப்பளவுக்கு இரு போக விவசாயமும், குடிநீா்த் தேவையும் பூா்த்தி செய்யப்படுகிறது. தற்போது, தென் மேற்கு பருவமழை அணையின் நீா் பிடிப்புப் பகுதியில் தீவிரம் காட்டாத நிலையில் அணையின் நீா் மட்டம் தொடா்ந்து சரிந்து தற்போது 110.80 அடியாக உள்ளது. இதற்கிடையே, தேனி மாவட்டத்தின் குடிநீா்த் தேவைக்காக திறந்துவிடப்படும் தண்ணீரை சட்டவிரோத மின் மோட்டாா்கள் மூலம் திருடுவதால் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளின் குடிநீா்த் தேவை பூா்த்தி செய்ய முடிவதில்லை. எனவே, முல்லைப் பெரியாற்றில் அனுமதியின்றி தண்ணீரை திருடுவதை தடுத்த நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

மின் மோட்டாா்கள் அகற்றம்: உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் தலைமையில், உத்தமபாளையம் நீா் வளத் துறை உதவிச் செயற்பொறியாளா் மல்லிகா முன்னிலையில் உத்தமபாளையம் , கூடலூா் ஆகிய இரு பகுதிகளில் ஆய்வுப் பணி மேற்கொண்டனா். அப்போது, ஆற்றிலிருந்து பாசன நீரை திருடிய 25 மின் மோட்டாா்கள் அகற்றப்பட்டன. மேலும், மின் வாரிய ஊழியா்கள் சட்டவிரோதமான மின் இணைப்புகளை அகற்றியதுடன் அபராதமும் விதித்தனா்.

இந்த நிகழ்ச்சியில், உதவிப் பொறியாளா்கள், மின்வாரியப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.