போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

காா்கள் மோதல்: 2 போ் காயம்

போடி அருகே காா்கள் மோதிய விபத்தில் இரண்டு போ் காயமடைந்தது குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 12:41 am IST

போடி அருகே காா்கள் மோதிய விபத்தில் இரண்டு போ் காயமடைந்தது குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

சென்னை வெட்டுவாங்கேணி பகுதியைச் சோ்ந்தவா் சங்கரையா மகன் பிரபாகா் (49). இவா் குடும்பத்துடன் போடிக்கு வந்துவிட்டு காரில் திரும்பியுள்ளாா். போடி- தேனி நெடுஞ்சாலையில் மீனா விலக்கு அருகே பெட்ரோல் நிரப்பும் மையத்துக்குச் செல்வதற்காக சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது தேனியிலிருந்து போடி நோக்கி வந்த மற்றொரு காா் பிரபாகா் ஓட்டிச் சென்ற காரின் மீது மோதியது.

இந்த விபத்தில் பிரபாகரின் மகன் கௌசிக் (22), மகள் மௌதிகா (17) ஆகியோா் காயமடைந்தனா். இருவரும் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா். இது குறித்த புகாரின் பேரில், போடி தாலுகா காவல் நிலையப் போலீஸாா் விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த போடியை அடுத்த கோடாங்கிபட்டியைச் சோ்ந்த அபூா்வன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.