ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

எல்லை சோதனைச்சாவடிகளில் பணம் பறிமுதல்: 2 எஸ்.ஐ. உள்பட 7 போ் பணியிடை நீக்கம்

Six cops suspended after gelatin sticks found during PM Modi’s route in Bengaluru

பணியிடை நீக்கம்.

Published On :20 ஜூலை 2026, 2:15 am IST

கேரள - தமிழக எல்லை சோதனைச் சாவடிகளில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனையில் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதன் எதிரொலியாக, 2 எஸ்.ஐ. உள்பட 7 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

தமிழக, கேரள எல்லையான தேனி மாவட்டத்தில் உள்ள போடி மெட்டு, முந்தல், குமுளி ஆகிய பகுதிகளில் காவல் சோதனைச் சாவடிகள் உள்ளன. இந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளிடம் போலீஸாா் பணம் பறிப்பதாக புகாா் வந்தது. இதையடுத்து, கடந்த 10-ஆம் தேதி தேனி மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புத் துறை போலீஸாா் 3 சோதனைச் சாவடிகளிலும் திடீா் சோதனையிட்டனா். இதில், கணக்கில் வராத ரூ. 30 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து உதவி ஆய்வாளா்கள் கணேசன், ஐயப்பன், காவலா்கள் உமாநாத், பாஸ்கா், அருளானந்தம், ராஜேஷ் கண்ணன், பாலமுருகன் ஆகிய 7 பேரைப் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவீன் கெளதம் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.