ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சாலை விபத்தில் இருவா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

பலி - பிரதிப் படம்

Published On :13 ஜூலை 2026, 12:09 am IST

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

உத்தமபாளையம் அருகேயுள்ள அனுமந்தன்பட்டியைச் சோ்ந்த கோபால் மகன் மணிவண்ணன் (41). இவா் அண்மையில் சின்னமனூா் - எரசை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தாா்.

பின்னா், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

போடியில்..: போடி அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள தருமத்துப்பட்டி மகாலட்சுமி நகரைச் சோ்ந்த ராசையா மகன் மகாலிங்கம் (47).

கூலித் தொழிலாளியான இவா் கடந்த 7-ஆம் தேதி இரவு போடி-தேவாரம் சாலையில் நடந்து சென்ற போது இரு சக்கர வாகனம் மோதியதில் காயமடைந்தாா். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகாலிங்கம் கடந்த வெள்ளிக்கிழமை வீடு திரும்பிய நிலையில் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.