ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கூடலூரில் சூறைக் காற்றுடன் மழை: வாழை மரங்கள் முறிந்து சேதம்- நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

கூடலூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை சூறைக் காற்றுடன் பெய்த மழையால் வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன.

Published On :9 ஜூலை 2026, 5:21 am IST

தேனி மாவட்டம், கூடலூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை சூறைக் காற்றுடன் பெய்த மழையால் வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன.

தேனி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள ஏகலூத்து, காஞ்சிமரத்துறை, வெட்டுக்காடு, காக்கான் ஓடை, புதுரோடு, தம்மாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சொட்டு நீா்ப் பாசன முறையில் பச்சை, நாழிப்பூவன், நேந்திரம் உள்ளிட்ட உயர்ரக திசு வாழை ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனா்.

தற்போது வாாழைத் தாா்கள் அறுவடைக்குத் தயாா் நிலையில் உள்ளன. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை சூறைக் காற்றுடன் பெய்த மழையால் ஏராளமான வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து விவசாயி சிவக்குமாா் கூறியதாவது:

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை, வேளாண் துறை சாா்பில் நிவாரண நிதி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்றாா் அவா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.