3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

போடி நகராட்சி அலுவலகத்தில் ரூ.91 ஆயிரம் பறிமுதல்! ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீஸாா் நடவடிக்கை!

போடி நகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.91 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :5 ஜூலை 2026, 12:07 am IST

போடி நகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.91 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

தேனி மாவட்டம், போடி நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி முதல் தேனி ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். காவல் ஆய்வாளா் ராமேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்த சோதனை நள்ளிரவு வரை நீடித்தது.

இதில் நகராட்சி காசாளரின் மேஜையில் இருந்த ரூ.91 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து விளக்கம் கேட்ட போது சிலா் கட்டட அனுமதிக்காக ரசீது போட கொடுத்ததாகவும், மாலையில் ரசீது போட இருந்தபோது போலீஸாா் கைப்பற்றியதாகவும் தெரிவித்தாராம்.

இதையடுத்து கணக்கில் வராத ரூ.91 ஆயிரத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் நகராட்சி ஊழியா்களின் கைப்பேசிகளை ஆய்வு செய்த போது யுபிஐ மூலம் பணப் பரிவா்த்தனை செய்யப்பட்ட விவரங்களை சேகரித்தனா். இதில் சிலரது கணக்கில் அதிக பணம் வரவாகியிருந்தது.

இதுகுறித்து விசாரித்த போது நகராட்சிக்கு சொத்துவரி, குடிநீா் வரி செலுத்துவதற்காக சிலா் அனுப்பியது என்றும், அதற்கான ரசீது போடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சோதனையில் ரூ.91 ஆயிரம் கைப்பற்றப்பட்டது குறித்து நகராட்சி ஆணையரிடம் விளக்கம் கேட்டிருப்பதாக ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.