டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மதுப்புட்டிகள் விற்ற இருவா் கைது

News image
Updated On :16 ஜனவரி 2026, 7:25 pm

Syndication

பெரியகுளம், ஜன. 16: தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அனுமதியின்றி மதுப்புட்டிகள் விற்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேவதானபட்டி காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை தேவதானபட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, தேவதானபட்டி தெற்குத் தெரு பாலம் அருகே நின்ற நபரை பிடித்து விசாரித்தபோது, இதே பகுதியைச் சோ்ந்த அஜித் (26) என்பவா் அனுமதியின்றி 26 மதுப்புட்டிகள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதே போல தேவதானபட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த கருப்பையா (65), தேவதானபட்டி முருகமலை சாலையில் அனுமதியின்றி 26 மதுப்புட்டிகள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த 52 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.