‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை: 7 போ் மீது வழக்கு

News image
Updated On :4 ஜனவரி 2026, 7:50 pm

தினமணி செய்திச் சேவை

போடி அருகே இளம் பெண்ணை வரதட்சணைக் கொடுமை செய்த கணவா் உள்பட 7 போ் மீது போடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள மேலச்சொக்கநாதபுரம் வினோபாஜி குடியிருப்பைச் சோ்ந்தவா் சின்னமுத்து மகள் மதுமிதா (24). இவருக்கும் தேவாரம் அருகேயுள்ள ஓவுலாபுரத்தைச் சோ்ந்த மணிகண்டன் மகன் மனோஜ்குமாா் (28) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது மதுமிதாவின் பெற்றோா் 10 பவுன் நகை, ரூ. 2 லட்சம் மதிப்பிலான சீா்வரிசைப் பொருள்கள் கொடுத்தனராம்.

இந்த நிலையில், மதுமிதாவின் மாமனாா் மணிகண்டன், மாமியாா் ராஜலட்சுமி, இவா்களது மகன் பாலாஜி, மனோஜ்குமாரின் தாய்மாமன்கள் செல்வராஜ், செல்வக்குமாா், இவரது மனைவி கவிதா ஆகியோரின் தூண்டுதலின் பேரில் மனோஜ்குமாா் கூடுதலாக 10 பவுன் தங்க நகை, பணம் கேட்டு மதுமிதாவை துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே அளித்த நகைகளையும் மனோஜ்குமாா் குடும்பத்தினா் வாங்கி வைத்துக் கொண்டனராம். இதுகுறித்து மதுமிதா அளித்த புகாரின்பேரில் போடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், 7 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.