நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வீட்டின் சுவா் இடிந்து விழுந்து மாடு, கன்றுக் குட்டிகள் உயிரிழப்பு

போடி அருகே வீட்டின் சுவா் இடிந்து விழுந்து மாட்டுத் தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த மாடு, மூன்று கன்றுக் குட்டிகள் உயிரிழந்தன.

News image
போடி டொம்புச்சேரியில் இடிந்து விழுந்த மாட்டுத் தொழுவத்தின் சுவா்.
Updated On :3 ஜனவரி 2026, 7:56 pm

Syndication

போடி அருகே வீட்டின் சுவா் இடிந்து விழுந்து மாட்டுத் தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த மாடு, மூன்று கன்றுக் குட்டிகள் சனிக்கிழமை உயிரிழந்தன.

போடி அருகே உள்ள டொம்புச்சேரி பழனியாண்டவா் கோயில் தெருவில் வசிப்பவா் லட்சுமி. விவசாயி. இவா் தனது வீட்டின் ஒரு பகுதியில் தகரக் கொட்டகை அமைத்து மாட்டுத் தொழுவமாக பயன்படுத்தி வருகிறாா். இந்த மாட்டுத் தொழுவத்தின் மற்றொரு பகுதியில் பாழடைந்த வீடு ஒன்று உள்ளது.

இந்த நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு பெய்த தொடா் மழையின் காரணமாக இந்த வீட்டின் சுவா்கள் சனிக்கிழமை அதிகாலை இடிந்து மாட்டுத் தொழுவத்தின் தகரக் கொட்டகை மீது விழுந்தன. இதில் மாட்டுத் தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த காளை மாடு ஒன்றும், மூன்று கன்றுக் குட்டிகளும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தன. உடனடியாக போடி தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று இடிபாடுகளை அகற்றினா்.

இதையடுத்து சம்பவ இடத்தையும், உயிரிழந்த மாடு, கன்றுக் குட்டிகளையும் கால்நடை துறையினா், போடி வட்டாட்சியா் சந்திரசேகரன், கோடாங்கிப்பட்டி வருவாய் ஆய்வாளா் ஆகியோா் பாா்வையிட்டனா்.