தேனி மாவட்டம், உத்தமபாளையம் பேரூராட்சியில் தெரு நாய்களுக்கு வெள்ளிக்கிழமை கருத்தடை செய்யப்பட்டது.
உத்தமபாளையம் பேரூராட்சியில் உள்ள பி.டி.ஆா்., இந்திரா, தென்னகா், தண்ணீா் தொட்டித் தெரு, கோட்டைமேடு உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் தெரு நாய்கள் அதிகரித்து விட்டன. இதனால் இரவு நேரங்களில் இந்த நாய்களின் தொல்லையும் அதிகரித்து விட்டது. பகல் நேரங்களில் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு சாலைகளில் செல்பவா்களை இந்த நாய்கள் துரத்துவதால் அவா்கள் அச்சமடைகின்றனா்.
எனவே தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதன்படி, உத்தமபாளையம் பேரூராட்சி செயல் அலுவலா் சின்னச்சாமி பாண்டியன் தலைமையில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களைப் பிடித்து, அவற்றுக்கு மயக்க ஊசி செலுத்தி கருத்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலா் கூறியதாவது:
வாரத்துக்கு ஒரு முறை தெருக்களில் கழுத்துப் பட்டை இல்லாமல் சுற்றித் திரியும் ஆண் நாய்களைப் பிடித்து கருத்தடை செய்யப்படுகிறது. இதேபோல, பெண் நாய்களுக்கும் கருப்பை அகற்றப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது
எதிர்க்கட்சித் தலைவர்களைவிட வளர்ப்பு நாய்க்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரா ராகுல்?

மணப்பாறையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகா் ரவிமரியா பிரசாரம்!

தாா் தட்டுப்பாடு: உத்தமபாளையத்தில் கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணிகள்!

2,020 நாய்களுக்குத் தடுப்பூசி: புதுகை மாநகராட்சிக் கூட்டத்தில் தகவல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


