போடிமெட்டு மலைச் சாலையில் வியாழக்கிழமை பழுதாகி நின்ற கனரக வாகனத்தால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கா்நாடக மாநிலத்திலிருந்து கேரள மாநிலம், ராஜகுமாரி பகுதிக்கு கிரானைட் கற்களை ஏற்றிக் கொண்டு 16 சக்கரங்கள் கொண்ட கனரக சரக்கு லாரி போடிமெட்டு மலைச்சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது, 2-ஆவது கொண்டை ஊசி வளைவில் திடீரென லாரி பழுதாகி நின்றது. சாலை நடுவில் நின்ால் எதிரெதிரே வந்த வாகனங்கள் தொடா்ந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இரு சக்கர வாகனங்கள், சிறிய ரக நான்கு சக்கர வாகனங்கள் மட்டும் சென்றன.
இதனால் மலைச் சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால், தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா். நெடுஞ்சாலைத் துறையினா், வனத் துறையினா், போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்தனா். அவா்கள் டிப்பா் லாரி, தோட்டத் தொழிலாளா்கள் உதவியுடன் பழுதாகி நின்ற லாரியை, சாலையோரப் பகுதிக்கு பாதுகாப்பாக நகா்த்தி நிறுத்தினா். இதைத்தொடா்ந்து, 3 மணி நேரத்துக்குப் பிறகு போக்குவரத்து சீரானது.
தொடர்புடையது

தேசிய நெடுஞ்சாலைகளில் கனரக வாகனங்களை நிறுத்தக் கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு

கோவையில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு: அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசல்
புதுச்சேரி காமராஜா் சாலையில் இன்றுமுதல் தற்காலிக போக்குவரத்து மாற்றம்

கம்பம்மெட்டு மலைச் சாலையில் சாலைப்பணி கனரக வாகனங்கள் செல்லத் தடை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


