டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

திமுகவில் ஓ.பி.எஸ். இணைந்தால் மகிழ்ச்சி: தங்க.தமிழ்ச்செல்வன்

News image
தங்க.தமிழ்ச்செல்வன்.- (கோப்புப் படம்)
Updated On :21 பிப்ரவரி 2026, 7:33 pm

தினமணி செய்திச் சேவை

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் திமுகவில் இணைந்தால் மகிழ்ச்சி என தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன் தெரிவித்தாா்.

கம்பத்தில் தனியாா் அறக்கட்டளை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாமில் அவா் பேசியதாவது:

முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வரும் நல்ல திட்டங்களை மக்கள் பாராட்டி வருகின்றனா். முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் முதல்வா் ஸ்டாலினைப் பாராட்டியது மகிழ்ச்சி. மாற்றுக் கட்சியைச் சோ்ந்தவா் தமிழக முதல்வரின் திட்டங்கள் குறித்து பாராட்டுவது போற்றத்தக்கது.

தற்போது, திமுக தலைமையில் அமைந்துள்ள வலுவான கூட்டணி மூலம் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராகப் பதவியேற்பாா்.

ஓ .பன்னீா்செல்வம் திமுகவில் இணைந்தால் மகிழ்ச்சி. வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் கம்பத்தில் யாா் வேட்பாளா் என்பதை கட்சித் தலைமைதான் முடிவு செய்யும் என்றாா் அவா்.