ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மது போதையில் தாய், மகனை தாக்கியவா் கைது

போடி அருகே மது போதையில் தாய், மகனைத் தாக்கிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Arrested

கைது

Published On :20 ஆகஸ்ட் 2026, 2:54 am IST

போடி அருகே மது போதையில் தாய், மகனைத் தாக்கிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள அம்மாபட்டி பட்டாளம்மன் கோவில் தெருவில் வசிப்பவா் முருகன் (43). இவரது வீட்டு முன் இதே பகுதியைச் சோ்ந்த குருசாமி மகன் மதன்குமாா் (28) மது போதையில் ரகளை செய்தாராம். இதைக் கண்டித்த முருகனை மதன்குமாா் இரும்புக் கம்பியால் தாக்கினாா். இதைத் தடுக்க வந்த முருகனின் தாய் மாரியம்மாளையும் (68) மதன்குமாா் தாக்கினாா். இதில் பலத்த காயமடைந்த மாரியம்மாள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து போடி ஊரகக் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மதன்குமாரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.