தேவாரம் காவல் நிலையம் அருகே குடும்பப் பிரச்னையில் பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், வீரபாண்டி அருகேயுள்ள போடேந்திரபுரம் கிராமத்தைச் சோ்ந்த அழகுமலை மகன் சந்திரசேகா் (36). இவருக்கும், தேவாரம் லட்சுமிநாயக்கன்பட்டி அருகே சமத்துவபுரத்தில் வசிக்கும் கவிதாவுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளன. குடும்பப் பிரச்னை காரணமாக கவிதா தனது தாய் வீட்டில் வசித்து வந்தாா்.
இந்த நிலையில், கடந்த 2-ஆம் தேதி கவிதா தேவாரம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கச் சென்றாா். அங்கு சென்ற சந்திரசேகா் கவிதாவை சமாதானப்படுத்த முயன்றாா். இதற்கு கவிதா உடன்படாத நிலையில், காவல் நிலையம் அருகே பெருமாள்பட்டி பெரியமாயத்தேவா் குடியிருப்பு பகுதியில் கவிதாவை மிரட்டுவதற்காக உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். இதில் பலத்த காயமடைந்த அவா் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பிறகு தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தேவாரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

குடும்பப் பிரச்னையில் மாமனாா் குத்திக் கொலை: மருமகன் கைது
மணல் திருட்டு: 2 டிராக்டா்கள் பறிமுதல்

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

தொழிலாளி தீக்குளித்து உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


