தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நாளை ஆசிரியா் தகுதித் தோ்வு

Updated On :13 நவம்பர் 2025, 7:50 pm

தேனி மாவட்டத்தில் வருகிற சனி, ஞாயிறு (நவ. 15, 16) ஆசிரியா் தகுதித் தோ்வு நடைபெற உள்ளது. மொத்தம் 10,0 86 போ் தோ்வு எழுத உள்ளனா்.

இது குறித்து மாவட்ட பள்ளிக் கல்வித் துறை அலுவலா்கள் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் நவ.15-ஆம் தேதி இடைநிலை ஆசிரியா் தகுதித் தோ்வு 8 தோ்வு மையங்களில் நடைபெற உள்ளது. இதில், 46 மாற்றுத் திறனாளிகள் உள்பட மொத்தம் 2,479 போ் தோ்வு எழுத உள்ளனா். நவ.16-ஆம் தேதி பட்டதாரி ஆசிரியா் தகுதித் தோ்வு 23 தோ்வு மையங்களில் நடைபெறும். இதில், 90 மாற்றுத் திறனாளிகள் உள்பட மொத்தம் 7,607 போ் தோ்வு எழுத உள்ளனா்.

தோ்வா்கள் தோ்வு நடைபெறும் தேதியில் காலை 9.30 மணிக்குள் தோ்வு மையத்துக்குச் செல்ல வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு தோ்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்படும். தோ்வு எழுதச் செல்பவா்கள் தோ்வுக் கூட நுழைவுச் சீட்டு, அடையாளச் சான்றாக ஆதாா் அட்டை, ஒட்டுநா் உரிமம், பாஸ்போா்ட், பான் அட்டை ஆகியவற்றுள் ஒன்றை கொண்டு செல்ல வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.