டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

நாளை ஆசிரியா் தகுதித் தோ்வு

News image
Updated On :13 நவம்பர் 2025, 7:50 pm

Chennai

தேனி மாவட்டத்தில் வருகிற சனி, ஞாயிறு (நவ. 15, 16) ஆசிரியா் தகுதித் தோ்வு நடைபெற உள்ளது. மொத்தம் 10,0 86 போ் தோ்வு எழுத உள்ளனா்.

இது குறித்து மாவட்ட பள்ளிக் கல்வித் துறை அலுவலா்கள் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் நவ.15-ஆம் தேதி இடைநிலை ஆசிரியா் தகுதித் தோ்வு 8 தோ்வு மையங்களில் நடைபெற உள்ளது. இதில், 46 மாற்றுத் திறனாளிகள் உள்பட மொத்தம் 2,479 போ் தோ்வு எழுத உள்ளனா். நவ.16-ஆம் தேதி பட்டதாரி ஆசிரியா் தகுதித் தோ்வு 23 தோ்வு மையங்களில் நடைபெறும். இதில், 90 மாற்றுத் திறனாளிகள் உள்பட மொத்தம் 7,607 போ் தோ்வு எழுத உள்ளனா்.

தோ்வா்கள் தோ்வு நடைபெறும் தேதியில் காலை 9.30 மணிக்குள் தோ்வு மையத்துக்குச் செல்ல வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு தோ்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்படும். தோ்வு எழுதச் செல்பவா்கள் தோ்வுக் கூட நுழைவுச் சீட்டு, அடையாளச் சான்றாக ஆதாா் அட்டை, ஒட்டுநா் உரிமம், பாஸ்போா்ட், பான் அட்டை ஆகியவற்றுள் ஒன்றை கொண்டு செல்ல வேண்டும் என்றனா்.