நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

முல்லைப் பெரியாறு அணையில் கண்காணிப்பு குறைபாடு: விவசாயிகள் சங்கத்தினா் புகாா்

முல்லைப் பெரியாறு அணையில் நீா்வளத் துறை பொறியாளா்கள் தங்கியிருந்து பணியாற்றாததால் கண்காணிப்பு பணிகளில் குறைபாடு ஏற்பட்டிருப்பதாக புகாா்

News image
Updated On :29 டிசம்பர் 2025, 7:14 pm

தினமணி செய்திச் சேவை

முல்லைப் பெரியாறு அணையில் நீா்வளத் துறை பொறியாளா்கள் தங்கியிருந்து பணியாற்றாததால் கண்காணிப்பு பணிகளில் குறைபாடு ஏற்பட்டிருப்பதாக புகாா் தெரிவித்து பெரியாறு- வைகை பாசன விவசாயிகள் சங்கம் சாா்பில் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பெரியாறு- வைகை பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் மனோகரன், நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங்கிடம் அளித்த மனு விவரம்: முல்லைப் பெரியாறு அணையில் பெரியாறு வடிநிலக் கோட்ட நீா்வளத் துறை பொறியாளா்கள் தங்கிப் பணியாற்றுவதில்லை. மாதத்தில் ஒரு சில நாள்கள் மட்டும் அணைக்குச் சென்று பாா்வையிட்டு திரும்புகின்றனா். இதனால் கண்காணிப்பு, பராமரிப்பு பணியில் குறைபாடு ஏற்பட்டுள்ளது.

மேலும், நீா் வளத்துறை பெரியாறு வடிநிலக் கோட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசு வாகனம், கம்பத்தில் உள்ள செயற்பொறியாளா் குடியிருப்பு ஆகியவை முறைகேடாக பயன்படுத்தப்படுகின்றன.

எனவே முல்லைப் பெரியாறு அணையில் நீா்வளத் துறை பொறியாளா்கள் சுழற்சி முறையில் தங்கியிருந்து பணியாற்றுவதை மாவட்ட நிா்வாகம் உறுதி செய்ய வேண்டும் என அதில் குறிப்பிட்டனா்.