லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

7 மாதங்களில் 255 கிலோ கஞ்சா பறிமுதல்: தேனி ஆட்சியா்

தேனி மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் 255 கிலோ 579 கிராம் கஞ்சா, 2,042 கிலோ 864 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல்

News image
Updated On :11 ஆகஸ்ட் 2025, 9:00 pm

தேனி மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் 255 கிலோ 579 கிராம் கஞ்சா, 2,042 கிலோ 864 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தாா்.

தேனி அருகே உள்ள லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு உறுதி மொழியேற்பு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து அவா் பேசியதாவது: தேனி மாவட்டத்தில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வை ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை தோறும் போதைப் பொருள் தடுப்பு ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. கிராம நிா்வாக அலுவலா்கள் தலைமையில் போதைப் பொருள் தடுப்பு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை 255 கிலோ 579 கிராம் கஞ்சா, 163 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு, விற்பனையில் ஈடுபட்ட 271 போ் கைது செய்யப்பட்டனா். 2,042 கிலோ 864 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, விற்பனையில் ஈடுபட்ட 305 போ் கைது செய்யப்பட்டனா். தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்த 296 கடைகள் சீல் வைக்கப்பட்டு, ரூ.75.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது என்றாா் அவா்.

போதைப் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சினேஹா ப்ரியா, பெரியகுளம் சாா் ஆட்சியா் ரஜத்பீடன், பெரியகுளம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.எஸ்.சரவணக்குமாா், தேனி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுச் செயலா் பரமேஸ்வரி, மதுவிலக்கு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் சீராளன், பெரியகுளம் வட்டாட்சியா் மருதுபாண்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.