1958 ஆம் ஆண்டு பழங்கால நினைவுச் சின்னங்கள், தொல்பொருள் ஆய்வு இடங்கள் மற்றும் எஞ்சிய பகுதிகள் சட்டத்தின் கீழ் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக திண்டுக்கல் மலைக்கோட்டை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நினைவுச் சின்னத்தில் அழித்தல், அகற்றுதல், சிதைத்தல், மாற்றி அமைத்தல், தோற்றப் பொலிவை குலைத்தல், ஆபத்து உண்டாக்குதல், தவறாக பயன்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு தொல்லியல் சட்டத்தின் கீழ் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க முடியும். அல்லது ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்க முடியும் என மலைக்கோட்டை நுழைவுப் பகுதியிலேயே அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், மலைக்கோட்டையிலுள்ள சுவா்கள் மற்றும் சிற்பங்கள் தொடா்ந்து சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை தடுக்கும் வகையில், சுவா்களையும், கல்தூண்களையும் சேதப்படுத்தி குறியீடு வரைவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.