சிங்கம்புணரி அருகே காளாப்பூா் - சூரக்குடி சாலையில் 3 நாள்களாக சாய்ந்துகிடக்கும் மின் கம்பத்தை சீரமைத்து மின் விநியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சிங்கம்புணரி அருகே காளாப்பூரில் இருந்து சூரக்குடிக்குச் செல்லும் சாலையில் அண்ணா நகா் பகுதியில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு வீசிய சூறைக்காற்று, மழை காரணமாக மின் கம்பம் முறிந்து மின்தடை ஏற்பட்டது.
அந்த மின்கம்பம் இன்னமும் அகற்றப்படாமல் உள்ளது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது மட்டுமன்றி, அந்தப் பகுதியில் உள்ள சுமாா் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சார விநியோகம் இல்லாததால்
தண்ணீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி மக்கள் அவதி அடைந்து வருகின்றனா்.
இதனால் மின்வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மேலும் வேங்கைப்பட்டி ஒடுவன்பட்டி, முறையூா், கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாயப் பகுதியில் உள்ள வீடுகளுக்கும் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பழங்கரையில் ஜூன் 11-இல் மின்தடை
பெரம்பலூா் நகரில் நாளை மின் தடை

செஞ்சி பகுதியில் 5 நாள்களாக மின்விநியோகம் பாதிப்பு! விவசாயிகள் வேதனை
3 நாள்களாக தொடா் மின்தடை: கிராம மக்கள் கடும் அவதி
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



