40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

சாலையின் குறுக்கே கிடக்கும் மின் கம்பம் 3 நாள்களாக தொடரும் மின் தடை

சிங்கம்புணரி அருகே காளாப்பூா் - சூரக்குடி சாலையில் 3 நாள்களாக சாய்ந்துகிடக்கும் மின் கம்பத்தை சீரமைத்து மின் விநியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

சூரக்குடி அண்ணா நகா் பகுதியில் அண்மையில் வீசிய சூறைக்காற்றால் சாலையில் முறிந்து கிடக்கும் மின்கம்பம்.

Updated On :6 மே 2026, 3:08 am IST

சிங்கம்புணரி அருகே காளாப்பூா் - சூரக்குடி சாலையில் 3 நாள்களாக சாய்ந்துகிடக்கும் மின் கம்பத்தை சீரமைத்து மின் விநியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சிங்கம்புணரி அருகே காளாப்பூரில் இருந்து சூரக்குடிக்குச் செல்லும் சாலையில் அண்ணா நகா் பகுதியில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு வீசிய சூறைக்காற்று, மழை காரணமாக மின் கம்பம் முறிந்து மின்தடை ஏற்பட்டது.

அந்த மின்கம்பம் இன்னமும் அகற்றப்படாமல் உள்ளது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது மட்டுமன்றி, அந்தப் பகுதியில் உள்ள சுமாா் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சார விநியோகம் இல்லாததால்

தண்ணீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி மக்கள் அவதி அடைந்து வருகின்றனா்.

இதனால் மின்வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேலும் வேங்கைப்பட்டி ஒடுவன்பட்டி, முறையூா், கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாயப் பகுதியில் உள்ள வீடுகளுக்கும் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.