தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

மானாமதுரையில் சூறைக் காற்று: வைகை ஆற்றில் அமைக்கப்பட்ட கடைகளின் மேற்கூரைகள் சேதம்

News image

~

Updated On :3 மே 2026, 5:05 am IST

மானாமதுரையில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் சித்திரைத் திருவிழாவுக்காக அமைக்கப்பட்டிருந்து கடைகளின் மேற்கூரைகள் பறந்து சேதமடைந்தன. சாலையில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வைகை ஆற்றில் வீர அழகா் எழுந்தருளல் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, மறுநாள் சனிக்கிழமை மானாமதுரை கிராமத்தாா் மண்டகப்படியில் இரவு நிலாச்சோறு வைபவம் நடைபெறும்.

அப்போது மானாமதுரை, சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் சைவ, அசைவ உணவுகளை சமைத்து அவற்றை மானாமதுரை வைகை ஆற்றுக்கு எடுத்து வந்து குடும்பத்தினா், உறவினா்கள், நண்பா்களுடன் உட்காா்ந்து சாப்பிட்டு வீடு திரும்புவா்.

இதற்காக மானாமதுரை பகுதி இறைச்சிக் கடைகளில் சனிக்கிழமை கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் அசைவ உணவுகளை வீடுகளில் தயாா் செய்து வைகை ஆற்றங்கரைக்குச் செல்லத் தயாராயினா்.

இந்த நிலையில், மானாமதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மாலையில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. அப்போது, வைகையாற்றுக்குள் அமைக்கப்பட்டிருந்த திருவிழா கடைகளின் கூரைகள் , விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பல்வேறு பொருள்கள் காற்றில் பறந்து சேதமடைந்தன. மேலும் ராட்டினங்களில் அமைக்கப்பட்டிருந்த மின்விளக்குகள் உடனடியாக அணைக்கப்பட்டது.

இதுதவிர மரங்கள் சாலைகளில் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மின் தடை ஏற்பட்டதால் நகரமே இருளில் மூழ்கியது. இதனால் நிகழாண்டில் நிலாச் சோறு நிகழ்ச்சிக்காக வைகை ஆற்றுக்கு பொதுமக்கள் வர முடியாத நிலை ஏற்பட்டது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.