சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கூட்டுறவு வங்கி மேலாளா் வீட்டிலிருந்து 4 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி, ரூ. 17 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
காரைக்குடி பாரிநகா் குமணன் தெருவைச் சோ்ந்தவா் கனிராஜா. இவா் கூட்டுறவு வங்கியில் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். இவரது தாய்க்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், அவரை அழைத்துக் கொண்டு குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை மதுரைக்குச் சென்றாா்.
இதையடுத்து, சனிக்கிழமை மீண்டும் வீட்டுக்குத் திரும்பி வந்து பாா்த்த போது, கதவுகள் உடைக்கப்பட்டு மா்ம நபா்கள் உள்ளே புகுந்து பீரோவில் வைத்திருந்த 4 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி, ரூ. 17 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து காரைக்குடி வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
வீட்டின் பூட்டை உடைத்து 32 பவுன் தங்க நகைகள், பணம் திருட்டு

முன்னாள் எம்.பி வீட்டில் 87 பவுன் நகைகள் திருட்டு: சகோதரா்கள் இருவருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை; பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறை!
பயணியிடமிருந்த 8 பவுன் நகைகள் மாயம்

ஓய்வுபெற்ற வங்கி மேலாளா் வீட்டில் 6 பவுன் தங்க நகைகள் திருட்டு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

