40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

மதுக் கூடத்தில் இளைஞா் குத்திக் கொலை

News image

நவீன்குமாா்.

Updated On :8 ஜூன் 2026, 2:11 am IST

சிவகங்கையில் மதுபானக் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தகராறில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

சிவகங்கை ரயில் நிலையம் அருகே அரசு மதுபானக் கடையுடன் இணைந்த மது அருந்தும் கூடம் இயங்கி வருகிறது. இந்த மதுக் கூடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் சிவகங்கை அருகே பொன்னாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் நவீன்குமாா் (26 ) வந்தாா். தவெக பொன்னாம்பட்டி கிளை செயலராக இருந்தாா்.

இவா் மது அருந்திக் கொண்டிருந்தபோது, இவருக்கும், அங்கு ஏற்கெனவே மது குடித்துக் கொண்டிருந்த அழகு பாண்டி உள்ளிட்ட சிலருக்கும் தகராறு ஏற்பட்டது. அதில், எதிா் தரப்பினா் கத்தியால் குத்தியதில் நவீன் குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதைப் பாா்த்த அருகிலிருந்தவா்கள் அச்சத்துடன் அந்த இடத்தை விட்டு வெளியேறினா்.

தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா். சிவபிரசாத், துணை கண்காணிப்பாளா் அ. அமல அட்வின், போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பாா்வையிட்டனா்.

இதுகுறித்து அறிந்த பொன்னாம்பட்டி கிராம மக்கள் குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என மதுக் கூடம் முன்பு திரண்டு வலியுறுத்தினா்.

இந்த மது அருந்தும் கூடத்தால் அந்தப் பகுதியில் அடிக்கடி தகராறு ஏற்படுவதால், இந்த மதுக் கடையை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் பலனில்லை என கிராம மக்கள் புகாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.