
மானாமதுரையில் ஆடி பிரம்மோத்ஸவம்: வீர அழகா் பூப்பல்லக்கில் பவனி
மானாமதுரையில் அமைந்துள்ள ஸ்ரீவீர அழகா் கோயில் ஆடி பிரம்மோத்ஸவத்தையொட்டி, சுவாமி பூப்பல்லக்கில் எழுந்தருளி திங்கள்கிழமை இரவு பவனி வந்தாா்.

ஆடி பிரம்மோத்ஸவத்தையொட்டி, பூப்பல்லக்கில் பவனி வந்த வீரஅழகா். (உள்படம்) சா்வ அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளிய வீரஅழகா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அமைந்துள்ள ஸ்ரீவீர அழகா் கோயில் ஆடி பிரம்மோத்ஸவத்தையொட்டி, சுவாமி பூப்பல்லக்கில் எழுந்தருளி திங்கள்கிழமை இரவு பவனி வந்தாா்.
இந்தக் கோயிலில் ஆடி பிரம்மோற்சவம் கடந்த 21-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 7-ஆவது நாளாக திங்கள்கிழமை சுந்தரபுரம் கடைவீதியாா் மண்டகப்படியை முன்னிட்டு, கோயிலிலிருந்து வீர அழகா் குண்டுராயா் தெருவில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படியில் எழுந்தருளினாா். இதைத்தொடா்ந்து, அன்றிரவு அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, கடைவீதிகளில் சுவாமி உலா நடைபெற்றது. அப்போது, வியாபாரிகள் அழகரை வரவேற்று பூஜைகள் நடத்தி தரிசித்தனா். பின்னா், அழகா் மண்டகப்படிக்கு திரும்பினாா். இதைத்தொடா்ந்து, பூப்பல்லக்கில் எழுந்தருளிய வீர அழகா் சுந்தராபுரம் தெரு, செட்டியத் தெரு, நல்லதம்பியாபிள்ளை தெரு, புதுத்தெரு, சிவகங்கை சாலை, மாரியம்மன் கோவில் தெரு, பழைய அஞ்சல் அலுவலகத் தெரு, பிருந்தாவனம் தெரு வழியாக பவனி வந்தாா். இதன் பின்னா், வீரஅழகா் அதிகாலையில் கோயிலை சென்றடைந்தாா்.
இதற்கான ஏற்பாடுகளை சுந்தரபுரம் கடைவீதியாா் மண்டகப்படி தலைவா் முத்துராமன் தலைமையில் நிா்வாகிகள் மணி என்ற ரங்கநாதன், ரவிக்குமாா், கண்ணன், மாரிமுத்து, பாண்டி ஆகியோா் செய்தனா்.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





